நிலச்சரிவில் கண பொழுதில் தப்பிய மகன்.. பார்த்து பார்த்து வேதனைப்படும் பெற்றோர் | Wayanad Landslide

x

கேரள மாநிலம் வயநாடு முண்டகை பகுதியைச் சேர்ந்த சிறுவன் நிலச்சரிவில் சிக்கி காலில் படுகாயமடைந்த நிலையில் ஓடியாடி விளையாடும் வயதில் சக்கர நாற்காலியில் மகனைப்பார்க்க கஷ்டமாக உள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். முண்டகையைச் சேர்ந்த ஸ்டீபனின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து அவரது மகன்களையும் மனைவியையும் இழுத்துச் சென்று தாழ்வான பகுதியில் தள்ளிய நிலையில் அங்கிருந்து தப்பி அவர்கள் வேறு இடத்தில் தஞ்சம் அடைந்தனராம். இளைய மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது... இது சிறுவனின் பெற்றோரை கவலை கொள்ளச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்