வயநாடு கோரம்.. "நாளை அல்லது நாளை மறுதினம்".. வெளியான முக்கிய தகவல்

x

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கேரளாஅனுப்பியது. கடந்த ஒரு வார காலமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் நாளை அல்லது நாளை மறுதினம் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்