முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த "வித் அவுட் டிக்கெட் பயணிகள்?" - "வந்தே பாரத் ரயிலிலும் இப்படியா?"

x

வந்தே பாரத் இரயிலில் முன்பதிவு பெட்டியை மொத்தமாக ஆக்கிரமித்த மக்களால் பயணிகள் திணறினர். லக்னோவிலிருந்து டேராடூன் செல்லும் வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு பெட்டியில் மக்கள் நிற்கக் கூட இடமில்லாமல் முன்டியடித்துக் கொண்டதால், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினர். வந்தே பாரத் ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளுமே முன்பதிவு செய்யக்கூடியவை. அப்படி இருக்கையில், முன்பதிவு செய்யாமல் எப்படி இவ்வளவு பேர் ரயிலில் ஏறினார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிகழ்வு , வந்தே பாரத் பயனாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்