பாம்பிடம் இருந்து குழந்தைகளை போராடி காப்பாற்றிய நாய் - ஆச்சரிய பட வைக்கும் பிளாஷ்பேக்

x

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் குழந்தைகளை பாதுகாக்க செல்ல நாய் ஒன்று நாகப்பாம்பை சண்டையிட்டு கொன்றது.

சிவகணேஷ் காலனியில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்த வீட்டின் தோட்டத்திற்குள் நாகப்பாம்பு ஒன்று திடீரென புகுந்துள்ளது. நாகப்பாம்பை கண்டதும் அவர்கள் சத்தமிட்டதால் தோட்டத்தின் மறுமுனையில் இருந்த ஜென்னி என்ற வளர்ப்பு நாய், பாம்பை ஆக்ரோஷமாக கடித்து கொன்றது. ஜென்னி இதுவரை பத்து பாம்புகளை கடித்து கொன்றுள்ளதாக அதன் உரிமையாளர் பஞ்சாப் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்