"தகுதியற்றவர் டிரம்ப்.." - அரசியல் வாழ்க்கைக்கு Full Stop வைத்த தீர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

x

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தீவிர முனைப்பு காட்டி வருகிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப். கடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியுற்றதால் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டனர். ட்ரம்ப் தூண்டுதலின் பேரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல அமெரிக்க மாகாணங்களில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொலொராடோ மாகாண உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்றும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் வாக்குச்சீட்டில் ட்ரம்ப் பெயர் இடம்பெறாது எனவும் பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது... அமெரிக்க வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு தகுதியற்றவர் என்று கருதப்படும் முதல் அதிபர் வேட்பாளர் ட்ரம்ப் ஆவார்... இந்தத் தீர்ப்பு அம்மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் முதன்மை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்... மேல்முறையீடு செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வரை தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கொலராடோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது... இத்தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று ட்ரம்ப் தரப்பு சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்