ஓடும் ரயிலில் மானம் காப்பாற்றும் முயற்சியில் தவறி வெளியே விழுந்த பெண்.. உடனே காமுகனே தாக்கிய கர்மா

x

தெலங்கானாவில், ஓடும் ரயிலில் மதுபோதையில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செகந்திராபாத்தில் இருந்து புவனேஸ்வர் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் மிரியாலகுடா நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, எஸ்-2 பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் கழிவறையில் இருந்து இருக்கைக்கு சென்றார். ​அங்கு மதுபோதையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த பிஸ்வாஸ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில், அந்தப் பெண் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த நிலையில், பிஸ்வாஸும் ரயிலில் இருந்து விழுந்தார். இருவரும் காயங்களுடன் தண்டவாளம் அருகே கிடந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவ​லின்பேரில், அங்கு வந்த ரயில்வே போலீசார், இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்