``ட்ராக்கில் கழற்றப்பட்ட நட்டுகள்; ஜங்ஷன் பாயிண்ட்கள்..'' - ரயில் விபத்து சதியா..? திடுக் தகவல்

x

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டிகளின் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும் 20 பயணிகள் லேசான காயமடைந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே வாரியம், ரயில்வே போலீசார் மற்றும் என்.ஐ.ஏ என தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். கவரப்பேட்டையில் ரயில் தண்டவாளம் மாறும் இடங்களில் உள்ள நட்டுக்கள் மற்றும் சில இடங்களில் ஜங்ஷன் பாயிண்ட் கழற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தண்டவாளத்தின் பாதையை மாற்ற முயன்ற போது அது செயல்படாமல் போனதும் இதனால் ரயில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை வேகமெடுத்து வருகிறது. எனவே தண்டவாளத்தின் நட்டுக்கள் மற்றும் ஜங்ஷன் பாயிண்ட்க்களை கழட்டியது யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்