``தமிழ்நாட்டில்... இதை பார்த்து வெட்கப்படுகிறேன்..'' - ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

x

காந்தி ஜெயந்தியையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை என தெரிவித்தார். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என விமர்சித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டு வெட்கப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்