நாட்டையே கொதிக்க வைத்த லட்டு.. திருப்பதியில் கூடும் 9 பேர்

x

திருமலை லட்டு பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட இக்குழு இன்று திருப்பதியில் முதன்முறையாக கூடுகிறது. இதைத்தொடர்ந்து, விசாரணையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் என தெரிகிறது. திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த கலப்பட நெய் வழக்கு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்ட பின்னர், விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முடியும் வரை, தேவையான கட்டிடங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் கணினியை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்