அணையாமல் எரியும் லட்டு... சீனுக்குள் வந்த தங்கை - ஜெகனுக்கு அடுத்த சிக்கல்...

x

லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ்.ஷர்மிளா அம்மாநில அளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ்.ஷர்மிளா அம்மாநில அளுநர் அப்துல் நஷீரை சந்தித்து மனு அளித்தார். அதில்

திருப்பதி லட்டு விவகாரத்தை மாநில அரசு மட்டுமே விசாரணை நடத்தக்கூடாது என்றும் சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

லட்டு விவகாரத்தில் நடந்தது மன்னிக்கவே இயலாத குற்றம் என்றும், இதனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க ஜெகன்மோகன் ரெட்டிக்கு உரமை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்