இறந்து கிடந்த தாய் அருகில் ரத்தம் சொட்ட சொட்ட குழந்தை கதறல்.. மனதை உடைய வைக்கும் காட்சி

x

இறந்து கிடந்த தாய் அருகில் ரத்தம் சொட்ட சொட்ட குழந்தை கதறல்.. மனதை உடைய வைக்கும் காட்சி

ஆந்திர மாநிலம் சித்தூரில், ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்ட தனியார் பேருந்து, நள்ளிரவில் கலக்கடா என்ற இடம் அருகே,

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது

மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தில் தனது தாய் இறந்ததை அறியாமல் குழந்தை ஒன்று, தாயின் அருகிலேயே காயங்களுடன் அமர்ந்து அழுது கொண்டிருந்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்