சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் 3வது நாளான இன்று காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்தார். இதையொட்டி செண்டை மேளம், நாதஸ்வரம், மும்பை டிரம்ஸ் மேளம், கோலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்