"ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயார்" - சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, கடந்த ஆட்சியில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், மனிதனாக பிறந்த யாரும் இதுபோல பேச மாட்டார்கள் என்றும், அரசியலுக்காக சந்திரபாபு எதையும் செய்வார்... எதையும் பேசுவார் என்பதையே அவரது பேச்சு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். குடும்பத்துடன் ஏழுமலையான் சன்னதியில் சத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்