துறை ஒதுக்கியவுடன் ஏழுமலையானிடம் வேண்டிய குமாரசாமி

x

பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு மிகப்பெரிய துறையை ஒதுக்கியுள்ளதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு,

தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களையும், வேத பண்டிதர்கள், வேத ஆசியும் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கூற, தான் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது துறை மூலம், பிரதமரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான சக்தி வழங்க ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டார். பிரதமர் தனக்கு மிகப்பெரிய துறையை ஒதுக்கியுள்ளதாகவும், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்