"N.D.A., I.N.D.I.A உடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை..." - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

x

மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஏழைகளுக்கு எதிரான வகுப்புவாத சாதியவாத கட்சிகள் என்றும், முதலாளித்துவ கொள்கைகளை கொண்டவை என்றும் விமர்சித்துள்ளார். இதனால், அவர்களுடன் கூட்டணி அமைப்பது என்ற கேள்வியே எழவில்லை என்றும், 2007ஆம் ஆண்டைப் போன்று, மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநிலத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஒருங்கிணைத்து தனித்தே போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்