வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி.. தரதரவென இழுத்துச் சென்ற சிறுத்தை

x

ஜம்மு-காஷ்மீர் அருகே உதம்பூரில், 4 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தீவிர தேடுத்ல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

உதம்பூர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை, சிறுத்தை இழுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் இதே பகுதியில், 4 வயது சிறுமி, சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே, சிறார்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அதிகாலை, மாலை நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்