நாட்டையே அதிர விட்ட சம்பவம் - உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

x

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான பொதுநல மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வரும் திங்களன்று வழங்க உள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வரும் திங்களன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்