ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பணமோசடி வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதோடு, சட்டவிரோத கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரேன் தொடர்ந்த வழக்கில் ஜார்க்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் எனவும் தெளிவுப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்