நடுநடுங்கிய பிரபல நடிகர்கள் - வரும் 3ம் தேதி வெடிக்க போகும் பூகம்பம்

x

நடுநடுங்கிய பிரபல நடிகர்கள் - வரும் 3ம் தேதி வெடிக்க போகும் பூகம்பம்

கேரளாவில், ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முதல் வழக்கு கோட்டயத்தில் பதிவு செய்யப்பட்டது.

கேரளாவில் திரைப்பட நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழு, விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்று கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

முதல் வழக்காக, கோட்டயம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் மேக்கப்மேன் ஒருவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வாக்குமூலம் அளித்த நிலையில், சிறப்பு விசாரணை குழு விசாரணைக்குப்பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹேமா கமிட்டியின் அறிக்கையில் நடிகைகள் அளித்த வாக்குமூலம் தொடர்பான சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வரும் 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்ய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்