டெல்லி Airport சம்பவம் - களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் - அடுத்து வெளியான UPDATE

x

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது டெல்லி விமான நிலையம் கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிற்பகல் 2 மணி வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் நலனுக்கே முன்னுரிமை தர வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்