15 லட்சம் மக்களை கதிகலங்க வைத்த வெள்ளம் மத்திய அரசுக்கு மல்லிகார்ஜூன கார்கே முக்கிய கோரிக்கை

x

பீகார் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். நேபாளத்தில் இருந்து பெய்த கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுதொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, வெள்ளம் காரணமாக, பீகாரில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள கார்கே, சேதமடைந்த பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்