"கெஜ்ரிவால் உயிர் - சதி திட்டம் நடக்கிறது" - ஆம் ஆத்மி எம்பி ஆவேசம்

x

டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வந்ததில் இருந்தே பாஜக பீதியில் உள்ளதாக விமர்சித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கொடிய தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த சதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக செயல்படுத்தப்படுவுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். ராஜீவ் சவுக் மற்றும் படேல் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல்கள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிரை பறிக்க பாஜக சதி செய்து வருவதாக சாடினார். முன்னதாக, 23 நாட்கள் சிறையில் இருந்த போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுக்காதவர்கள் இப்போது இதெல்லாம் செய்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்