மல்லுவுட்டில் புயலை கிளப்பிய பாலியல் வழக்கு.. நடிகை சார்பில் கேவியட் மனு

x

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன் ஜாமின் கோரிய நடிகர் சித்திக்கின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. அவரது முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளிபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். வழக்கு விசாணையில், தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கேரளா அரசு மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்