சீட்டுக்கட்டுக்களை போல சரியும் பாலங்கள்.. 15 நாட்களில் 9 காலி..! பீதியில் பீகார்... நிதிஷுக்கு நெருக்கடி - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பீகாரை சேர்ந்த ப்ரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பீகாரில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறியுள்ளார். வலுவான உள் கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாக உள்ள நிலையில், மாநில முழுவதும் உள்ள பாலங்களின் கட்டுமானத்தை உறுதி செய்ய உயர்நிலை குழுவைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், பலவீனமாகவுள்ள பாலங்களையும் இடிக்கவும் உத்தரவிட கோரியுள்ளார். இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, இதற்கு பதில் அளிக்க பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்