இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள்.. காத்திருந்து வரவேற்ற அதிகாரிகள்

x

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்கள் 3 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். கடந்த மார்ச் மாதம் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்கள் மூவரும், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்