இலங்கையில் அதிபர் தேர்தல் எப்போது? - ஜூலை மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

இலங்கையில் அதிபர் தேர்தல் எப்போது? - ஜூலை மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜூலை மாத இறுதியில் அதிபர் தேர்தல் வாக்கெடுப்புக்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதிக்கு பின்னர் அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில், அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்