ஃபுல் போதையில் நாகப்பாம்பை வம்பிழுத்த இளைஞர்...கடும் கோபத்தில் படமெடுத்து கடித்த அதிர்ச்சி வீடியோ

x

போதையில் தன்னை வம்பிழுத்த இளைஞரை நாகப்பாம்பு கொத்திய அதிர்ச்சிகர சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது...

அனந்தூர் கதிரி அரசு கல்லூரி வளாகத்தினுள் நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது... அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் பாம்பை வம்பிழுக்கத் துவங்கினார்... அமைதியாக இருந்த பாம்பின் தலையிலேயே தட்டிக் கொண்டே இருந்த இளைஞரை...ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் பாம்பு கொத்தியது... சுற்றி இருந்தவர்கள் எச்சரித்தும் கூட கேட்காததால் பாம்புக்கடி வாங்கிய இளைஞரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்