கடைசி நொடியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உயிரை காப்பாற்றிய இந்தியா

x

வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியா வந்த ஷேக் ஹசீனாவிடம் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்கதேசத்தில் உள்நாட்டு கிளர்ச்சியால் அங்கிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியா வந்தார். அவர் வந்த விமானம் டெல்லிக்கு அருகே காசியாபாத்தில் இருக்கும் ஹிண்டன் விமான தளத்தில் தரை இறங்கியது. ஹசீனாவை விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர். ஹசீனாவோடு அவரது தங்கை ஷேக் ரஹானாவும் வந்திருந்தார். வங்கதேசத்தில் போராட்டம் தீவிரம் அடைய காலையில் நிலையை இந்திய அரசிடம் கூறிய ஹசீனா, உதவுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவரது கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விமானப்படை தளத்திற்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவோடு நிலை குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். விமானப்படை மேற்கு தளபதி ஏர் மார்சல் பிஎம் சின்ஹாவும் ஷேக் ஹசினாவை சந்தித்தார்


Next Story

மேலும் செய்திகள்