சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு.. "இனி.." - வெளியான முக்கிய அறிவிப்பு

x

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜையில் ஆன்-லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை ஏற்பாடு குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜையில் ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேருக்கு தரிசன வசதி ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்யும் போதே தரிசன யாத்திரைக்கான பாதையை தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்த உள்ளதாகவும், பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்