சபரிமலை பக்தர்களுக்கு நல்ல செய்தி..!

x

சபரிமலை பம்பையில் உள்ள ஹில்டாப் மற்றும் சக்குபாலம் பகுதிகளில் பக்தர்களின் சிறிய ரக வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் காவல் துறையினரால் செய்யப்பட்டுள்ளன. மாத பூஜை காலங்களில் மட்டும் பம்பையில் உள்ள வாகன நிறுத்தங்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கூறி வழக்கு தொடரப்பட்ட்ட நிலையில் வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 2 நாட்களுக்கு முன் பம்பையிலுள்ள ஹில்டாப், சக்குபாலம் பகுதியில் சிறிய ரக வாகனங்கள் 800 வரை நிறுத்த அனுமதி கொடுத்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்