சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு... காப்பீடு திட்டம் அறிமுகம் | sabarimala | insurance

x

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் யாத்திரை காலங்களில் செய்யப்படவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தேவசம் போர்டு, அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. அதில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காப்பீடு வசதி அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்