"பாரத் என்பது இந்தியா அல்ல.." ஆளுநர் கிளப்பிய புதிய பரபரப்பு | R. N. Ravi | Thanthitv

x

மதுரை சோழவந்தானில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் பாரதிய சிக்ஷான் மண்டல் என்ற அமைப்பு சார்பில் 'இந்திய அறிவு தளம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரத் என்ற சொல்லை இந்தியா என்று புரிந்து கொள்ள கூடாது என்றார். இந்தியா என்பது ஒரு அரசாங்க வடிவம் மட்டுமே என்றும், ஆனால், பாரத் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள ஒரு சொல் என்றும் கூறினார். இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே என்ற ஆளுநர், மாநிலங்களை தனித்தனியாக அணுக கூடாது... மொத்தமாக ஒரே நாடாக கருத வேண்டும் என்று தெரிவித்தார். இன்று ஐரோப்பிய சிந்தனைகளை பின்பற்றி வருவதாகவும், அதை விடுத்து, பாரதீய சிந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஆளுநர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்