உயிர் போகும் முன் ரத்தன் டாட்டா எழுதி வைத்த உயில்..யார் யாருக்கு சொத்தில் பங்கு -எதிர்பாரா திருப்பம்

x

ரத்தன் டாடா 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களில் பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும் என உயில் எழுதி வைத்துள்ளார். ரத்தன் டாடா தனது சமையல்காரர், உதவியாளர்களுக்கு சொத்துக்களை வழங்கியுள்ளார். ரத்தன் டாடாவுக்கு கடைசி காலத்தில் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, சகோதரர் ஜிம்மி டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னாவுக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார். அவரிடம் நீண்ட காலமாக உதவியாளராக வேலை பார்த்து வரும் ராஜன் ஷாவுக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். வளர்ப்பு நாய்களின் மீது அதிகம் பிரியம் கொண்ட ரத்தன் டாடா, 6 மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்த தனது செல்லமான வளர்ப்பு நாயான டிட்டோவுக்கும் உயில் எழுதி வைத்துள்ளார். ராஜன் ஷாவே தனது வளர்ப்பு நாயான டிட்டோவை தனக்கு பிறகு கவந்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உயிலில் குறிப்பிட்டுள்ளார். டிட்டோவை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தன்னிடம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்