சீனாவால் `சிதைந்த' டாடாவின் காதல்... கடைசி வரை திருமணம் செய்யாத காரணம் - ரத்தன் மறைத்த ரகசியம்

x

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்ன காரணம் ? என்பது குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

தலைசிறந்த தொழிலதிபராகவும், கொடையுள்ளம் கொண்டவராகவும் திகழ்ந்த ரத்தன் டாடா பலருக்கு இன்றும் இன்ஸ்பிரேஷன் தான்..

தொழிலில் கோலோச்சிய ரத்தன் டாடா, இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே மறைந்தார்...

இதன் பின்னணியில் உருக்கமான காதல் கதையும் இருக்கிறது. அதுவும் சீதா ராமம் படம் போன்றதொரு உருக்கமான கதை..

சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரிந்த ரத்தன் டாடா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர்... பாட்டி இந்தியாவில் இருக்க, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் படித்துக் கொண்டிருந்த காலத்தில் காதல் வயப்பட்டுள்ளார் ரத்தன் டாடா...

திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு சென்ற போது, பாட்டியுடன் இருக்க வேண்டிய நிர்பந்தத்தால் இந்தியா வந்துள்ளார்.

காதலி இந்தியா வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருந்த சூழலில், குறுக்கிட்டுள்ளது இந்தியா-சீனா இடையேயான போர்...

போர் சூழலால், காதலியின் பெற்றோர் அவரை இந்தியாவிற்கு அனுப்ப மறுத்துள்ளனர். இதனால் ரத்தன் டாடாவின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது..

இதன் பின்னர், பாலிவுட் நடிகையான சிமி கரேவாலுவை காதலித்தார் ரத்தன் டாடா.. இருப்பினும் இந்த காதல் கதையும் திருமணம் வரை செல்லவில்லை...

தொழிலதிபராக பிசியாக இருந்த டாடா, 4 முறை திருமணம் வரை சென்றும் அது சுபத்தில் முடியவில்லை. ஆம், அவர் வாழ்க்கையில் மொத்தம் 4 காதல் தோல்விகள் இருந்ததாக கூறப்படுகிறது..

ஆனால் அது குறித்தெல்லாம் ரத்தன் டாடா வருத்தப்பட்டதில்லையாம்... ஒரு கட்டத்தில் பிசினஸ்-ஐ கவனிப்பது மட்டுமே முழு நேர பணியாக இருந்ததால் தன்னை குறித்து சிந்திக்கவே இல்லை என நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்