நாடே கொண்டாடிய தலைமகன் டாடாவுக்கு கிடைத்த கௌரவம் - வெளியான அறிவிப்பு

x

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

டாடாவின் மறைவையொட்டி மகாராஷ்டிரா மாநில அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்தியாவின் பெருமையாக திகழ்ந்தவர் ரத்தன் டாடா எனவும் வருங்கால தலைமுறையை சேர்ந்த சுயதொழில் முனைவோர் அனைவருக்கும் அவர் ரோல் மாடலாக திகழ்வார் என புகழாரம் தெரிவித்துள்ளார்.

அவருடைய உறுதியான முடிவுகள், துணிச்சலான நடவடிக்கை, சமூக உறுதிப்பாடு ஆகியவை அனைவராலும் எப்போதும் நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் இறுதி நிகழ்வில் இந்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார்..


Next Story

மேலும் செய்திகள்