ரத்தன் டாடா மரணம்.. கலங்கி நிற்கும் ஆனந்த் மகிந்திரா.. அதானி சொன்ன அந்த வார்த்தை

x

ரத்தன் டாடா இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் அவரது வழிகாட்டுதல் இந்தியாவிற்கு விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ள ஆனந்த் மகிந்திரா நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள் எனவும் லெஜண்ட்ஸ் ஒருபோதும் இறக்க மாட்டார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

அதானி குழும தலைவர் கெளதம் அதானி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நவீன இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்த ஒரு மாபெரும் தொலைநோக்கு பார்வையாளரை இந்தியா இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா ஒரு வணிக தலைவர் மட்டுமல்ல என்றும், அவர் இந்தியாவின் உணர்வை ஒருமைப்பாடு, இரக்கம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் உருவகப்படுத்தினார் என்றும் கெளதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்