டாடாவின் இறுதிச்சடங்கு எப்போது? - அறிவிப்பு

x

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடாவுக்கு சிறப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் காலாமானார். இந்த நிலையில், ரத்தன் டாடாவின் உடல், கொலாபாவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், மும்பை என்சிபிஏ அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்