ஒரே பெண் - 14 ஆண்கள்.. தலைசுற்ற வைத்த பாலியல் புகார்.. அடுத்தடுத்த ட்விஸ்ட்.. அதிரும் பின்னணி

x

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து பெண் ஒருவர் பல ஆண்களிடம் பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை சட்டம் பயின்றவராக வழக்கறிஞர் நிதின் மீனாவிடம் அறிமுகப்படுத்தி கொண்ட பாவனா சர்மா என்ற பெண், பிறகு பணம் கொடுக்காவிட்டால் தம் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடருவேன் என அவரை மிரட்டி பணம் பறித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் கடந்த 2016 ஆண்டு முதல் இதே போல் பல ஆண்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து இருப்பதை கண்டுபிடித்த வழக்கறிஞர் நிதின், சம்பந்தப்பட்ட பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, பாவனா சர்மாவை கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்