ரயில்வே அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு.. பயணிகளுக்கு குட் நியூஸ்

x

முன்பதிவு ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளை, கடந்த சில மாதங்களாகவே, முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமிப்பதும், அதன் காரணமாக முன்பதிவு செய்த பயணிகள் சிரமங்களைச் சந்திப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்யாதவர்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணஷ் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்டல ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே கோட்ட பொது மேலாளர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாகவும், ரயில்வே காவலர்களுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்