ஷேவிங் செய்த நபரிடம் - ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ

x

ஷேவிங் செய்த நபரிடம் - ராகுல் காந்தி கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ

டெல்லி கும்கார் காலனி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி அப்பகுதி மக்களோடு கலந்துரையாடினார். பின்னர் அங்கிருக்கும் சலூனில் முகச்சவரம் செய்துக் கொண்டார். முகச்சவரம் செய்துக் கொண்டே தொழிலாளர் அஜித்திடம் அவர் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளையும், சவால்களையும் கேட்டறிந்தார். இதுகுறித்த வீடியோவை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார். அதில், அஜித் வார்த்தைகள்... இந்தியாவில் கடினமாக உழைக்கும் ஏழைகள், நடுத்தட்டு மக்கள் கதையை தெளிவாக எடுத்துரைப்பதாக கூறினார். குறைந்து வரும் வருமானும், விலைவாசி உயர்வும் முடி திருத்தும் தொழிலாளர், செருப்பு தைக்கும் தொழிலாளர், மண்பானை செய்யும் தொழிலாளர்கள் முதல் மரவேலை செய்யும் தொழிலாளர்கள் வரையில், அவர்களுடைய சொந்த வீடு, சொந்தக் கடை மற்றும் சுயமரியாதை என்ற கனவுகளை பறித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் வருவாயை பெருக்க, வீட்டிற்கு சேமிப்பை கொண்டு செல்ல புதிய திட்டங்கள், நவீன தீர்வுகள் தேவையெனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்