சீறிப்பாய்ந்த காளைகள்...துணிந்து அடக்கிய வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பு

x

ஓசூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றது... தேன்கனிக் கோட்டையில் பழமை வாய்ந்த பேட்டராய சாமி கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற எருதுவிடும் நிகழ்வில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. உற்சாகமாக நடைபெற்ற இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்... சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் காளையர்கள் அடக்கினர்... அப்போது சிலருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்