டூவீலர் மேலேயே போடப்பட்ட சாலை... தீயாய் பரவும் காட்சி | puducherry

x

புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அகற்றாமலேயே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருமுடி நகர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் பழுதாகி இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அதனை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே, அடுத்தக்கட்டமாக வாய்க்கால் அமைக்கும்போது அந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி பணிகள் நடைபெறும் என ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்