கடன் தொல்லை - தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி

x

திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜ கணேஷ். புதுச்சேரி கரசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் இவர், தனியாக அப்பளம் கம்பெனி திறக்க திட்டமிட்டு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தொழில் தொடங்காத நிலையில், கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி கேள்வி எழுப்பி ராஜ கணேஷிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட ராஜகணேஷ், பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கிக் கொண்டு ஏரிக்கரைக்கு சென்று தீக்குளித்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து. ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்