பட்டப்பகலில் கொடூர கொலை.. வெறியாட்டம் ஆடிய பிரபல ரவுடி...பீதியில் மக்கள்

x

புதுச்சேரி சனாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு என்பவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்து வந்துள்ளார். வழக்கம் போல் டீ சப்ளை செய்ய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்த‌து. தகவலறிந்து சென்ற போலீசார் பாபுவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரபல ரவுடியான புளியங்கொட்டை என்கிற ரங்கராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தது தெரியவந்த‌து. அவர்களை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாபுவின் உறவினர்கள்ள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்