வாரணாசியில் பிரதமர் வேட்புமனு தாக்கல்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் தமிழர் ஃபோட்டோ

x

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமர் மோடியிடம் வேட்பு மனு பெற்ற தென்காசிகாரரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ். ராஜலிங்கம் என்பவரிடம், வேட்பு மனு தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். ராஜலிங்கம், தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்தவர். இவர், கடந்த 2022-ம் ஆண்டு வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் பிரதமர் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது எஸ். ராஜலிங்கம் அமர்ந்திருக்க, பிரதமர் மோடி எழுந்து நின்று உறுதி மொழி வாசித்தது தொடர்பான புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, கடையநல்லூர் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்