இலவச மதுபானம் கேட்டு ரகளை...பெட்ரோல் குண்டுவீசிய இளைஞர் கைது

x
  • புதுச்சேரியில், இலவச மதுபானம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர், கடை ஊழியர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. வில்லியனூரை அடுத்த பங்கூரில் இயங்கி வரும் தனியார் மதுபான கடைக்கு வந்த ஒருவர், இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். கடை ஊழியர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த நபர்,
  • பாட்டிலில் பெட்ரோல் வாங்கி, பெட்ரோல் குண்டு தயாரித்து கடையின் உள்ளே வீசியுள்ளார். இதில், கடையில் தீ பரவி கண்ணாடிகள் வெடித்துச் சிதறின. சம்பவம் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பங்கூரை சேர்ந்த அருண்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்