நாடுவிட்டு நாடு வந்து சம்பவம்... சிக்கிய நைஜீரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

x

இணைய வழியாக தன்னிடம் நன்கு பழகிய 2 பேர், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை அனுப்புவதாக கூறி 13 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக புதுச்சேரியை சேர்ந்த பெண் சைபர் கிரைமில் புகார் அளித்தார். விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த ஈக்கோ ஓகோ, உசெம்மா பேவர் ஆகியோர் பெங்களூருவில் இருந்தபடி மோசடி செய்தது தெரியவர அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட உசெம்மா பேவர் பேட்ரிக்குக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பேட்ரிக் சிறையிலிருந்த காலத்தை கழிக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்