``2 ஆயிரம் கோடி..'' - சிக்கிய போதை பொருள்... நாட்டையே அதிர வைத்த போபால் தொழிற்சாலை...

x

போபாலில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் போபாலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போதைப்பொருள் தாயாரிப்பு தொழிற்சாலையை கண்டுபிடித்த போலீசார், அங்கிருந்து போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மதிப்பு ஆயிரத்து 814 கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் எதிர்ப்புக்கு எதிராக போலீசார் நடத்தி வரும் அயராத முயற்சிக்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணம் என்றும் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி குறிப்பிட்டுள்ளார். நமது சமூகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இது போன்ற கூட்டு முயற்சிகள் முக்கியமானவை எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்