நடிகைக்கு நேர்ந்த கொடூரம்... நடிகர் திலீப் கோர்ட்டில் ஆஜர் | DIleep

x

2017ல், மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில்குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டிய நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏழரை வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்த பல்சர் சுனில்குமார் சமீபத்தில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. நடிகர் திலீப், பல்சர் சுனில்குமார் உள்பட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மூடப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்