ரயில் நிலையத்தில் பரபரப்பு - இளைஞர் செய்த பகீர் செயல்

x

புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது, ரயில் நிலையம் அருகே பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த இளைஞரை கைது செய்து போலீசார் காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கைதான இளைஞர் அரியாங்குப்பத்தை சேர்ந்த பரத் என தெரியவந்தது. வண்ணாரப்பேட்டையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் பரத்தை, அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர் தாக்கிவிட்டு சென்றதாகவும், இதில் ஆத்திரமடைந்த பரத், தனுஷை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டை தயாரித்து, அதனை வெடித்து ரயில் நிலையம் நடைமேடை அருகே வெடித்து சோதனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்